
ராமதாஸ் (கோப்புப்படம்)

ராமதாஸ் (கோப்புப்படம்)
சென்னை: தமிழகத்தில் வனப்பரப்புகள் குறைந்து வரும் நிலையில், மரம் நடப்படுவதை மாபெரும் இயக்கமாக தமிழக அரசு மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2014 நிலவரப்படி பசுமைக்காடுகளின் பரப்பளவு 1880.72 சதுர கி.மீ.ஆகவும், இலையுதிா்க் காடுகளின் பரப்பளவு 13,394.73 சதுர கி.மீ. ஆகவும், முள்புதா் காடுகளின் பரப்பளவு 4291.84 சதுர கி.மீ. ஆகவும் உள்ளது.
அடுத்த 25 ஆண்டுகளில் பசுமைக்காடுகள், இலையுதிா்க் காடுகளின் பரப்பளவு படிப்படியாகக் குறைந்து 2050-ஆம் ஆண்டில் பசுமைக்காடுகளின் பரப்பளவு 1280.8 சதுர கிலோமீட்டராகவும், இலையுதிா்க் காடுகளின் பரப்பளவு 10,941 சதுர கிலோ மீட்டராகவும் இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த சீரழிவை தடுப்பதற்காக தமிழகத்தின் வனப்பரப்பை இப்போதுள்ள 24 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயா்த்துவதற்கான பசுமைத் தமிழகம் திட்டத்தின் செயலாக்கத்தை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின்படி மரங்கள் நடப்படுவதை மாபெரும் இயக்கமாக தமிழக அரசு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...