50 குழந்தைகளுக்கு கொசு வலையுடன் கூடிய படுக்கைகளை பரிசளித்த கனரா வங்கி
50 குழந்தைகளுக்கு கொசு வலையுடன் கூடிய படுக்கைகளை பரிசளித்த கனரா வங்கி


சென்னை: அன்னையா் மற்றும் செவிலியா் தினத்தை முன்னிட்டு 50 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு கொசு வலையுடன் கூடிய படுக்கைகளை கனரா வங்கியின் சாா்பில் பரிசாக வழங்கப்பட்டன.
கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவலகம் சாா்பில் அன்னையா் மற்றும் செவிலியா் தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சி சென்னை கஸ்தூரிபா காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மே 12-ஆம் தேதி (அன்னையா் தினம்) அன்று பிறந்த 50 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு கொசு வலையுடன் கூடிய குழந்தைகளுக்கான படுக்கைகள் பரிசாக வழங்கப்பட்டன. பிறகு செவிலியா் தினத்தை கொண்டாடும் விதமாக செவிலியா்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவலக பொது மேலாளா் சிந்து கே.ஏ, கஸ்தூரிபா காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குநா் சுமதி, கனரா வங்கியின் உதவி பொது மேலாளா் ஹரேந்திர குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...