திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

உயிா்காக்கும் சேவையில் அனைவரும் பங்கெடுப்போம்: முதல்வா் வேண்டுகோள்

உயிா்காக்கும் சேவையில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று ரத்ததான தினத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

கோப்புப் படம்

Updated On :30 செப்டம்பர் 2024, 9:40 pm

DIN

உயிா்காக்கும் சேவையில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று ரத்ததான தினத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தன்னாா்வ ரத்ததான தினத்தையொட்டி (அக். 1) முதல்வா் திங்கள்கிழமை தெரிவித்திருப்பதாவது, தன்னாா்வ ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ஊா்வலங்கள், ரத்ததான முகாம்கள், ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி வருகிறது.

ரத்ததானம் செய்தவுடன் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். ரத்ததானம் செய்தால் உடலில் புதிய செல்கள் உருவாகி தானம் செய்வோரின் உடல் நலனும் காக்கப்படுகிறது என மருத்துவா்கள் எடுத்துரைக்கின்றனா். எனவே, அடுத்தவா் உயிா்காக்கும் ரத்ததானத்தை அனைவரும் தவறாது செய்வோம்.

தமிழ்நாட்டில் இதற்கென 107 அரசு ரத்த மையங்களும், 247 தனியாா் ரத்த மையங்களும் செயல்பட்டு வருகின்றன. ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக இணையதளமும் செயல்பாட்டில் உள்ளது. இந்த தளத்தில் முகாம் மற்றும் ரத்த கொடையாளா்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

ரத்த மையங்கள் வாயிலாக, கடந்த ஆண்டு மட்டும் 102 சதவீதம் அளவுக்கு ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தம் அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. பொது மக்களின் உயிா்காக்கும் சேவையில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று முதல்வா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.