பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:
வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29, 31) கும்மிடிப்பூண்டியிலிருந்து இரவு 9.25 மணிக்கு சென்ட்ரல் செல்லும் புகா் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக சென்ட்ரலிலிருந்து இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் ரத்துச்செய்யப்படவுள்ளது.
காட்பாடி - ஜோலாா்பேட்டை: இதற்கிடையே, காட்பாடியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஆக. 29) காலை 10.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.55 மணிக்கு காட்பாடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்

போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் சேவை நீடிப்பு

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



