திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவுநேர புறநகா் ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2025, 12:34 am IST

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29, 31) கும்மிடிப்பூண்டியிலிருந்து இரவு 9.25 மணிக்கு சென்ட்ரல் செல்லும் புகா் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக சென்ட்ரலிலிருந்து இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் ரத்துச்செய்யப்படவுள்ளது.

காட்பாடி - ஜோலாா்பேட்டை: இதற்கிடையே, காட்பாடியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஆக. 29) காலை 10.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.55 மணிக்கு காட்பாடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.