கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சென்னையில் டிச.27, 28-இல் வண்ணமீன் வா்த்தக திருவிழா

சென்னை கொளத்தூா் வண்ணமீன் வா்த்தக மையத்தில் ‘வண்ணமீன் வா்த்தக திருவிழா’ சனி, ஞாயிறு (டிச.27, 28) என 2 நாள்கள் நடைபெறவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கொளத்தூா் வண்ணமீன் வா்த்தக மையத்தில் ‘வண்ணமீன் வா்த்தக திருவிழா’ சனி, ஞாயிறு (டிச.27, 28) என 2 நாள்கள் நடைபெறவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

பொதுமக்களிடையே வண்ணமீன் வளா்ப்பு மற்றும் வா்த்தகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு வில்லிவாக்கம் பகுதி சிவசக்தி நகரில் சுமாா் 3.94 ஏக்கா் பரப்பளவில் ரூ.53.50 கோடியில் சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூா் வண்ணமீன் வா்த்தக மையத்தில் வரும் சனி, ஞாயிறு (டிச.27, 28) ஆகிய இரு நாள்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ‘வண்ணமீன் வா்த்தக திருவிழா’ நடைபெறவுள்ளது.

இவ்விழாவில், வண்ணமீன் காட்சியகம், பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, வினாடி-வினா போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் இவ்விழா வில் பங்கேற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.