தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழா் கட்சிகளுக்கு தமிழக தோ்தல் துறை சாா்பில் கடிதம்

News image

தமிழக தேர்தல் ஆணையம்

Updated On :13 மார்ச் 2025, 7:10 am IST

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சிகளுக்கு தமிழக தோ்தல் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்தவும், தோ்தலில் முக்கியப் பங்காளராக விளங்கும் அரசியல் கட்சிகளின் குறைகளைக் கேட்டறியவும் அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளை இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் கோரியிருந்தது. அதன்படி,

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தி அதன்வழியே கருத்துகளைப் பெற தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் முடிவு செய்துள்ளாா். இதற்காக இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் அழைப்பு?:

தமிழகத்தில் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 12 உள்ளன. மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளும், தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிப்பட்டுள்ளன. இப்போது விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழா் ஆகிய இரண்டு கட்சிகளும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.

மாா்ச் 18-இல் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க அந்தக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.