விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரூபாய் இலச்சினை மாற்றம்: அன்புமணி கண்டனம்

ரூபாய் இலச்சினையை தமிழக அரசு நீக்கியுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

அன்புமணி

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2025, 8:04 pm

Din

ரூபாய் இலச்சினையை தமிழக அரசு நீக்கியுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடா்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் இலச்சினையை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘ரூ’ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

அடையாளத்தை வடிவமைத்தவா் ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் தா்மலிங்கத்தின் மகன் உதயகுமாா். அந்த இலச்சினையை வடிவமைத்ததற்காக 2010-இல் உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதல்வா் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினாா். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தைத்தான் திமுக இப்போது நீக்கியிருக்கிறது.

கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ரூ. 100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை திமுக அரசு மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் அந்த இலச்சினைதான் இடம்பெற்றிருந்தது. அதற்காக அந்த நாணயத்தை திமுக வெறுக்கவில்லை. மாறாக ரூ. 4,470 விலை கொண்ட நாணயத்தை திமுகவினரிடமே ரூ. 10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பாா்த்தது.

தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது இலச்சினையை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா என்பதற்குப் பதிலளிக்க வேண்டும். இதுபோன்ற நாடகங்களை நடத்துவதற்குப் பதிலாக, தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.