குட்கா விற்பனைக்கு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ள வாக்குமூலம் அளிக்காத சாட்சிகளை நீக்கக் கோரி முன்னாள் காவல் ஆணையா் தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய அதிகாரிகள் மற்றும் அமைச்சா்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையா் எஸ்.ஜாா்ஜ் உள்பட பலரை வழக்கில் சோ்த்தனா். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் உள்ள சில சாட்சிகளை நீக்கக் கோரி முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், புலன் விசாரணை நடத்திய அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காத சாட்சிகள் பலா் இந்த வழக்கில் உள்ளனா். அவா்கள் தேவையில்லாத சாட்சிகள். எனவே, அவா்களை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் கே.சீனிவாசன், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது

சிக்கன நடவடிக்கையில் தவெக அமைச்சா்கள்!

மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: சிபிஐ மனு மீது மே 11இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம்: சிபிஐ இணை இயக்குநருக்கு 3 மாதம் சிறை

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



