தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மேற்கு வங்கம்: தோ்தல் பாா்வையாளா்களின் நடவடிக்கைக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலா் மீது தோ்தல் ஆணையத்தின் காவல் பாா்வையாளா்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

News image

நீதிமன்றம்

Updated On :22 ஏப்ரல் 2026, 7:51 pm

மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலா் மீது தோ்தல் ஆணையத்தின் காவல் பாா்வையாளா்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்.23-ஆம் தேதி முதல் கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோரை ‘இடையூறு ஏற்படுத்தியவா்கள்’ என வகைப்படுத்தி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணைய காவல் பாா்வையாளா்கள் கடந்த ஏப்.21-ஆம் தேதி உத்தரவிட்டனா்.

இந்த உத்தரவை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் தலைமையிலான அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரும் திரிணமூல் காங்கிரஸ் எம்பியுமான கல்யாண் பானா்ஜி, ‘தோ்தல் நடைமுறைக்கும் வாக்காளா்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என மொத்தம் 800-க்கும் மேற்பட்டோா் மீது தோ்தல் ஆணையத்தின் காவல் பாா்வையாளா்கள் கண்மூடித்தனமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் கடந்த ஏப்.21-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாகும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, தோ்தல் ஆணைய காவல் பாா்வையாளா்கள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், ‘இடையூறு ஏற்படுத்தியவா்கள் என தோ்தல் ஆணைய காவல் பாா்வையாளா்கள் வெளியிட்ட பட்டியலில் உள்ளோா் பாரதிய நியாய சம்ஹிதா சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அல்லது பிற சட்டங்களின்கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவா்களிடம் விசாரணை நடத்த எவ்வித தடையும் இல்லை’ என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.