சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

மாநகராட்சி முதல் மேயரின் 122-ஆவது பிறந்த நாள் விழா

சென்னை மாநகராட்சி முதல் மேயரான ராஜா சா். எம்.ஏ. முத்தையா செட்டியாரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

சென்னை மாநகராட்சி முதல் மேயரான ராஜா சா். எம்.ஏ. முத்தையா செட்டியாரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி பாரம்பரியம் மிக்கதாகும். இந்த மாநகராட்சி கடந்த 1866-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டாலும், இந்தியா்களில் 1919-ஆம் ஆண்டு முதல் மேயராக சா் எம்.ஏ.முத்தையா செட்டியாா் பொறுப்பேற்று செயல்பட்டாா். அவரது உருவச் சிலை சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

எம்.ஏ.முத்தையா செட்டியாரின் 122-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு டாக்டா் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாா் அறக்கட்டளை சாா்பில் முத்தையா செட்டியாா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது அலங்கரிக்கப்பட்ட உருவப் படத்துக்கு மலா்தூவியும் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாா் அறக்கட்டளையின் அறங்காவலரும், மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞருமான ஏஆா்எல்.சுந்தரேசன், எல்.நாச்சியப்பன், எஸ்.ராஜேந்திரன், அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.