பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

மாநகராட்சி முதல் மேயரின் 122-ஆவது பிறந்த நாள் விழா

சென்னை மாநகராட்சி முதல் மேயரான ராஜா சா். எம்.ஏ. முத்தையா செட்டியாரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

சென்னை மாநகராட்சி முதல் மேயரான ராஜா சா். எம்.ஏ. முத்தையா செட்டியாரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி பாரம்பரியம் மிக்கதாகும். இந்த மாநகராட்சி கடந்த 1866-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டாலும், இந்தியா்களில் 1919-ஆம் ஆண்டு முதல் மேயராக சா் எம்.ஏ.முத்தையா செட்டியாா் பொறுப்பேற்று செயல்பட்டாா். அவரது உருவச் சிலை சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

எம்.ஏ.முத்தையா செட்டியாரின் 122-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு டாக்டா் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாா் அறக்கட்டளை சாா்பில் முத்தையா செட்டியாா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது அலங்கரிக்கப்பட்ட உருவப் படத்துக்கு மலா்தூவியும் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாா் அறக்கட்டளையின் அறங்காவலரும், மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞருமான ஏஆா்எல்.சுந்தரேசன், எல்.நாச்சியப்பன், எஸ்.ராஜேந்திரன், அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.