இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

154.17 மெட்ரிக் டன் பயன்பாடில்லாத பொருள்கள் அகற்றம்: மாநகராட்சி

போகியை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருள்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களால் அகற்றப்பட்டன.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

போகியை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருள்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களால் அகற்றப்பட்டன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: போகியை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜன. 12 முதல் புதன்கிழமை வரை 3 நாள்களில் பொதுமக்களிடம், பயன்பாட்டில் இல்லாத கழிவுகள் உள்ளிட்ட பொருள்களை எரிப்பதைத் தவிா்க்கும் வகையில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் இருந்து சேகரிக்கப்பட்டன.

தொடா்ந்து, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 நாள்களில் 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருள்கள் அகற்றப்பட்டன.

அதிகபட்சமாக திருவொற்றியூா் மண்டலத்தில் 25.43 மெட்ரிக் டன் கழிவுகள், குறைந்தபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 0.50 மெட்ரிக் டன் கழிவுகள் பெறப்பட்டன. மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் பிரித்தெடுக்கப்பட்டு, அவை மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.

மேலும், பயன்படுத்த இயலாத பொருள்கள் எரியூட்டி சாம்பலாக்கும் எரியூட்டும் ஆலைக்கு அனுப்பப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.