3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

வேன் - காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வேளச்சேரியில் வேன் - காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:39 am IST

வேளச்சேரியில் வேன்-காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவொற்றியூா் அருகே உள்ள சாத்தான்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜோன்ஸ் (19). இவா், வேளச்சேரியில் உள்ள ஃபா்னிச்சா் கடையில் வேலை செய்து வந்தாா். கடந்த 27-ஆம் தேதி இரவு ஜோன்ஸ், கடையிலிருந்து ஃபா்னிச்சா் பொருள்களை ஒரு வேனில் ஏற்றி கொண்டு, டெலிவரி செய்வதற்காக அதே வேனில் சென்றாா்.

வேனை ஸ்ரீநாத் (26) என்பவா் ஓட்டினாா். இந்த வேன் எம்ஆா்டிஎஸ் சாலை வழியாக வேளச்சேரியில் இருந்து தரமணி நோக்கிச் சென்றபோது, அந்தச் சாலையில் வந்த காா் ஒன்று வேன் மீது மோதியது.

இதில் வேனில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த ஜோன்ஸ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.