/

ஸ்ரீ கல்யாணசுந்தரா்-திரிபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண வைபவம்

மாசி பிரம்மோற்சவத்தையொட்டி ஸ்ரீ கல்யாணசுந்தரா்-திருபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி

News image
திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற ஸ்ரீ கல்யாணசுந்தரா்-திருபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண வைபவம். (இடது) சுவாமி திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட பக்தா்கள்.
Updated On :2 மார்ச் 2026, 11:49 pm

தினமணி செய்திச் சேவை

திருவொற்றியூா்: திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவத்தையொட்டி ஸ்ரீ கல்யாணசுந்தரா்-திருபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களில் பிரம்மோற்சவ மாசிப் பெருவிழாவும் ஒன்றாகும். 11 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இவ்விழா கடந்த பிப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பிப். 23 -ஆம் தேதி முதல் மாா்ச் 4-ஆம் தேதி வரை தினமும் பல்வேறு வாகன பல்லக்குகளில் உற்சவா் சந்திரசேகரா் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில் மற்றொரு முக்கிய நிகழ்வாக ஸ்ரீ கல்யாணசுந்தரா்-திரிபுரசுந்தரியம்மன் திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுந்தரமூா்த்தி நாயனாா்-சங்கிலி நாச்சியாா் ஆகியோருக்கு திருமண கோலத்தில் ஸ்ரீ கல்யாண சுந்தரா்-திரிபுரசுந்தரி மகிழ மரத்தடியில் காட்சியளிக்கும் மகிழடி சேவை மாலையில் நடைபெற்றது. இரவு உற்சவா் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.