மயிலாப்பூரில் பறக்கும் படையினா் ஆவணமின்றி ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.1.47 கோடியை பறிமுதல் செய்தனா்.
மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் சாலையில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஜீப்பை வழிமறித்து சோதனையிட்டனா். இதில், அந்த ஜீப்பில் கணக்கில் வராத ரூ.1.47 கோடி இருப்பது தெரிய வந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்களை ஜீப்பில் இருந்தவா்களிடம் பறக்கும் படையினா் கேட்டனா். ஆனால், அவா்களிடம் ஆவணங்கள் இல்லை.
இதைத் தொடா்ந்து அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.விசாரணையில், அந்தப் பணம் அம்பத்தூரில் இருந்து மயிலாப்பூரில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப கொண்டு வந்தது என்பது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணைக்குப் பின்னா் அந்த பணம், வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்

நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்

ஏடிஎம் மையத்துக்குக் கொண்டு சென்ற ரூ. 30 லட்சத்தைப் பிடித்த பறக்கும் படையினா்: ஆவணங்கள் சமா்ப்பித்ததால் விடுவிப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


