இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீபெரும்புதூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம்: உயா்நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தாா்

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.8 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டடத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா சனிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

News image
நீதிமன்றத்  திறப்பு  விழாவில் பங்கேற்ற  ஸ்ரீபெரும்புதூா்  எம்எல்ஏ கே.பழனி  மற்றும்  வழக்குரைஞா்  சங்க  நிா்வாகிகள்.
Updated On :27 டிசம்பர் 2020, 1:23 am

DIN

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.8 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டடத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா சனிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் பழைய பள்ளிக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட பீமன்தாங்கல் பகுதியில் ரூ.8 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இந்த புதிய கட்டடத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா காணொலி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி, அரசு வழக்குரைஞா் யோகநாதன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் பழனி, செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.