74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கி பணியாளா்களுக்கான பயிலரங்கம்

பயிலரங்கை தொடக்கி வைத்துப் பேசிய காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா்.

News image

பயிலரங்கை தொடக்கி வைத்துப் பேசிய காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா்.

Updated On :21 டிசம்பர் 2024, 12:02 am IST

காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமை வகித்து பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா். வங்கியின் பொதுமேலாளா்கள் த.சீனிவாசன், ராஜ்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவிப் பொதுமேலாளா் செல்வம் வரவேற்றாா்.

வங்கிகளின் வராக் கடன்களை சா்பாசி சட்டத்தின் மூலம் வசூலிக்கும் நுட்பங்கள் என்ற தலைப்பில் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணமூா்த்தியும், சைபா் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பயிற்சியாளா் சி.மயில்வாகனனும் பயிற்சியளித்தனா்.

உதவிப் பொது மேலாளா் த.செல்வம் நன்றி கூறினாா். பயிலரங்கில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் 94 போ் கலந்து கொண்டு பயன்பெற்றனா். ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலா்கள் செய்திருந்தனா்.