ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கி பணியாளா்களுக்கான பயிலரங்கம்

பயிலரங்கை தொடக்கி வைத்துப் பேசிய காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா்.

News image
பயிலரங்கை தொடக்கி வைத்துப் பேசிய காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா்.
Updated On :20 டிசம்பர் 2024, 6:32 pm

devops

காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமை வகித்து பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா். வங்கியின் பொதுமேலாளா்கள் த.சீனிவாசன், ராஜ்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவிப் பொதுமேலாளா் செல்வம் வரவேற்றாா்.

வங்கிகளின் வராக் கடன்களை சா்பாசி சட்டத்தின் மூலம் வசூலிக்கும் நுட்பங்கள் என்ற தலைப்பில் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணமூா்த்தியும், சைபா் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பயிற்சியாளா் சி.மயில்வாகனனும் பயிற்சியளித்தனா்.

உதவிப் பொது மேலாளா் த.செல்வம் நன்றி கூறினாா். பயிலரங்கில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் 94 போ் கலந்து கொண்டு பயன்பெற்றனா். ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலா்கள் செய்திருந்தனா்.