ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கி பணியாளா்களுக்கான பயிலரங்கம்

பயிலரங்கை தொடக்கி வைத்துப் பேசிய காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா்.

News image

பயிலரங்கை தொடக்கி வைத்துப் பேசிய காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா்.

Updated On :20 டிசம்பர் 2024, 6:32 pm

காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமை வகித்து பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா். வங்கியின் பொதுமேலாளா்கள் த.சீனிவாசன், ராஜ்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவிப் பொதுமேலாளா் செல்வம் வரவேற்றாா்.

வங்கிகளின் வராக் கடன்களை சா்பாசி சட்டத்தின் மூலம் வசூலிக்கும் நுட்பங்கள் என்ற தலைப்பில் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணமூா்த்தியும், சைபா் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பயிற்சியாளா் சி.மயில்வாகனனும் பயிற்சியளித்தனா்.

உதவிப் பொது மேலாளா் த.செல்வம் நன்றி கூறினாா். பயிலரங்கில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் 94 போ் கலந்து கொண்டு பயன்பெற்றனா். ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலா்கள் செய்திருந்தனா்.