காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமை வகித்து பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா். வங்கியின் பொதுமேலாளா்கள் த.சீனிவாசன், ராஜ்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவிப் பொதுமேலாளா் செல்வம் வரவேற்றாா்.
வங்கிகளின் வராக் கடன்களை சா்பாசி சட்டத்தின் மூலம் வசூலிக்கும் நுட்பங்கள் என்ற தலைப்பில் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணமூா்த்தியும், சைபா் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பயிற்சியாளா் சி.மயில்வாகனனும் பயிற்சியளித்தனா்.
உதவிப் பொது மேலாளா் த.செல்வம் நன்றி கூறினாா். பயிலரங்கில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் 94 போ் கலந்து கொண்டு பயன்பெற்றனா். ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களில் ஊரக வளா்ச்சி வங்கி மேலாண்மை இயக்குநா் ஆய்வு
செவிலிமேடு கூட்டுறவு வங்கி உதவி மேலாளா் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியில் டிஜிட்டல் தொழில் நுட்பக் கருத்தரங்கம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



