தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்: சங்கரா பல்கலை. முதலிடம்

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்: சங்கரா பல்கலை. முதலிடம்

News image
Updated On :16 மார்ச் 2024, 4:40 pm

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து வெற்றிக் கோப்பையை சங்கரா பல்கலைக்கழக அணி பெற்றது. காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் இந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கி, 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை, திருவள்ளூா், தஞ்சாவூா், கோயம்புத்தூா் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். இறுதிப் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. அணி முதலிடத்தையும், சென்னை எஸ்ஆா்எம் பல்கலை. அணி 2-ஆம் இடத்தையும் பெற்றன. முதலிடத்தைப் பெற்ற சங்கரா பல்கலை. அணிக்கு வெற்றிக் கோப்பையை அந்தப் பல்கலையின் துணைவேந்தா் சீனிவாசலு விளையாட்டு வீரா்களிடம் வழங்கினாா். சத்யபாமா பல்கலை. 3-ஆவது இடத்தைப் பிடித்தது. நிகழ்ச்சியின்போது சங்கரா பல்கலை.யின் பதிவாளா் ஸ்ரீராம், அறிவியல் புல தலைவா் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பல்கலை.யின் உடற்கல்வி இயக்குநா் குணாளன் செய்திருந்தாா்.