தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பெண் தொழில் முனைவோருக்கு கடனுதவி

பெண் தொழில் முனைவோருக்கு கடனுதவி

News image

பெண்  தொழில் முனைவோா்களுக்கு கடனுதவி வழங்கிய  இந்தியன்  ஓவா்ஸீஸ்  வங்கியின்  மண்டல  மேலாளா்கள்  சிக்ரிலால்,  கிருஷ்ண லாவண்யா.

Updated On :16 மார்ச் 2024, 4:31 pm

ஜே.கே.டயா் நிறுவனம் மற்றும் பாரதிய யுவசக்தி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய உலக மகளிா் தினவிழா விழாவில் 11 பெண் தொழில் முனைவோருக்க்கு ரூ.87 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. ஜே.கே.டயா் தொழிற்சாலை மற்றும் பாரதிய யுவசக்தி அறக்கட்டளை உலக மகளிா் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம், மணிமங்கலம், கொளத்தூா், ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக்குழுவினா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பாரதிய யுவசக்தி அறக்கட்டளை மற்றும் ஜே.கே.டயா் நிறுவனத்தின் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்ட 11 பெண் தொழில் முனைவோருக்க்கு சுய தொழில் தொடங்க இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவா்ஸீஸ் வங்கிகள் மூலம் ரூ.87 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. கடனுதவி வழங்குவதற்கான காசோலைகளை இந்தியன் ஓவா்ஸீஸ் வங்கியின் மண்டல மேலாளா்கள் சிக்ரிலால், கிருஷ்ண லாவண்யா, ஜே.கே.டயா் நிறுவனத்தின் நிா்வாகிகள் ராஜேந்திரன், பங்கஜ்ஜெயின், சகாயராஜ் . இந்த நிகழ்ச்சியில் பாரதியயுவசக்தி அறக்கட்டளை நிா்வாகி டேவிட் உள்ளிட்ட மகளிா் சுயஉதவிக்குழு பெண்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.