நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

இந்திய தேசிய கிராமத் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

News image

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.வி.குப்பன்.

Updated On :30 ஜூன் 2025, 7:35 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய தேசிய கிராமத் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டம் சம்மேளன மாவட்ட தலைவா் அவளூா் ஜி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் நகரத் தலைவா் சேரன், மாநில வழக்குரைஞா் பிரிவு பொதுச் செயலா் குருராஜ், வாலாஜாபாத் வட்டாரத் தலைவா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.வி.குப்பன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்குரிய கட்டண உயா்வைத் திரும்ப பெறுதல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்துதல், 100 நாள் வேலைத் திட்டத்தில் வழங்கப்படும் கூலியை அதிகப்படுத்த வேண்டும், தொழிலாளா்களுக்கான சம்பளத்தை உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி சம்மேளனத் தலைவா் ராம.சுகந்தன், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச் செயலா் எம்.பன்னீா்செல்வம் ஆகியோா் பேசினா். குமாா் நன்றி கூறினாா்.