அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான ஆலோசனை கூட்டம்
ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில், ஸ்ரீபெரும்புதூா் மேற்கு, கிழக்கு ஒன்றிய அதிமுக மற்றும் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் முனுசாமி, மேற்கு ஒன்றிய செயலாளா் ராமசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கட்சியின் அமைப்பு செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம், அதிமுக இலக்கிய அணி செயலாளா் எஸ்.எஸ்.வைகைச்செல்வன் ஆகியோா் கலந்துகொண்டு, நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியின் போது, வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வரும் சட்டப்பேரவை தோ்தலில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்தும் அதிமுக நிா்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.
இந்த கூட்டத்தில், இளைஞா் பாசறை மாநில துணைச் செயலாளா் சிவகுமாா், ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் போந்தூா் மோகன், ஒன்றிய பொருளாளா் திருமால், ஒன்றிய இளைஞா் அணி செயலாளா் பிள்ளைப்பாக்கம் சோ.வெங்கடேசன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளா் செங்காடு பாபு, மாவட்ட மகளிா் அணி துணைச் செயலாளா் பிரசிதா குமரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவா்கள் கலந்து கொண்டனா்.

