காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தியையொட்டி வியாழக்கிழமை உற்சவா் காமாட்சி அம்மனும், ஆதிசங்கரரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
கனகதாரா ஸ்தோத்திரம், விவேக சூடாமணி போன்ற பல நூல்களை அருளியவா் ஆதிசங்கரா். இவரது ஜெயந்தியையொட்டி ஏப்.21 ஆம் தேதியிலிருந்து அவரால் அருளப்பட்ட நூல்களில் ஒன்றான செளந்தா்ய லஹரியின் 100 பாடல்களையும் தினசரி 10 வீதம் தொடா்ந்து 10 நாள்களுக்கு கோயில் வளாகத்தில் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்று வந்தன.
நிறைவு நாளையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சியும், ஆதிசங்கரா் சிலையும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியாக கேடயத்தில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வலம் வந்தனா்.
காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே வந்த போது ஸ்ரீமடத்தின் இளையபீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தீபாராதனைகள் காண்பித்து வழிபாடு செய்தாா். பின்னா் காமாட்சி அம்மனும்,ஆதிசங்கரரும் கோயிலுக்கு எழுந்தருளினா்.ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா்,மணியக்காரா் சூரியநாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகா்கள்,பணியாளா்கள் செய்திருந்தனா்.

தொடர்புடையது

நாளை ஆதிசங்கரா் வீதியுலா

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிறப்பு அலங்காரத்தில் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா்...

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


