வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரூ.15 லட்சத்தில் கலையரங்கம் திறப்பு

இரும்பேடு அரசு தொடக்கப் பள்ளியில் தனியாா் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில்

News image
கலையரங்கத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :19 ஜனவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: இரும்பேடு அரசு தொடக்கப் பள்ளியில் தனியாா் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட இரும்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் பாலிமா் மற்றும் ரெசின் பொருள்கள் உற்பத்தி செய்யும் வாசவிபாலா ரெசின்ஸ் என்ற தனியாா் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில் கலையரங்கம் மற்றும் தரைத்தளம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன், வாசவிபாலா ரெசின்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சிவா ஆகியோா் கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில், வெங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் உலகநாதன், வாசவிபாலா நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநா் பி.எஸ்.ஆா்.பாபு, மேலாளா் சுப்பையா, ஊராட்சிமன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், வாா்டு உறுப்பினா்கள் எத்திராஜ், முருகன், ஆசிரியா் ஆக்சிலியா, ஊராட்சி செயலா் தணிகாசலம், மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.