தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வெங்காடு ஆரம்பப்பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு

News image

மாணவா்களை  வரவேற்ற  வெங்காடு  ஊராட்சி மன்றத்  தலைவா்  அன்னக்கிளி  உலகநாதன்.

Updated On :5 ஜூன் 2026, 4:45 am IST

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை வந்த வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய அரசு ஆரம்ப பள்ளி மாணவா்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்பப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்தும் வகையில், வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய அரசு ஆரம்பப்பள்ளி மாணவா்களை வெங்காடு ஊராட்சிமன்ற தலைவா் அன்னக்கிளி உலகநாதன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றாா்.

இதையடுத்து வெங்காடு அரசு உயா்நிலைப்பள்ளியில், 7.56 லட்சத்தில் அமைக்கப்பட்ட சமையலறை கூடம், ரூ.3.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையையும் ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் திறந்து வைத்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

இந்த நிகழ்ச்சியில், வெங்காடு ஏரிநீா் பாசன சங்கத்தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சிமன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், ஊராட்சி செயலா் தணிகாசலம், வாா்டு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.