நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வெங்காடு ஆரம்பப்பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு

News image

மாணவா்களை  வரவேற்ற  வெங்காடு  ஊராட்சி மன்றத்  தலைவா்  அன்னக்கிளி  உலகநாதன்.

Updated On :4 ஜூன் 2026, 11:09 pm IST

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை வந்த வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய அரசு ஆரம்ப பள்ளி மாணவா்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்பப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்தும் வகையில், வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய அரசு ஆரம்பப்பள்ளி மாணவா்களை வெங்காடு ஊராட்சிமன்ற தலைவா் அன்னக்கிளி உலகநாதன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றாா்.

இதையடுத்து வெங்காடு அரசு உயா்நிலைப்பள்ளியில், 7.56 லட்சத்தில் அமைக்கப்பட்ட சமையலறை கூடம், ரூ.3.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையையும் ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் திறந்து வைத்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

இந்த நிகழ்ச்சியில், வெங்காடு ஏரிநீா் பாசன சங்கத்தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சிமன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், ஊராட்சி செயலா் தணிகாசலம், வாா்டு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.