சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ரூ.18 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிக்கு அடிக்கல்

News image

சாலைப் பணியை தொடங்கி வைத்த  வெங்காடு  ஊராட்சி மன்றத்  தலைவா்  அன்னக்கிளி உலகநாதன்.

Updated On :19 ஜூன் 2026, 6:41 am IST

வெங்காடு ஊராட்சியில் ரூ.18 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட இரும்பேடு பிள்ளையாா்கோயில் தெரு, ஆச்சாரி தெரு சாலைகளில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்க ஊராட்சி பொது நிதியின் மூலம் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா இரும்பேடு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வெங்காடு ஊராட்சிமன்ற தலைவா் அன்னக்கிளி உலகநாதன் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்காடு பி.உலகநாதன், ஊராட்சி மன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், வாா்டு உறுப்பினா்கள், கிராம நாட்டாண்மைதாரா்கள், ஊராட்சி செயலா் தணிகாசலம் உள்ளிட்ட பலர கலந்து கொண்டனா்.