40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஜூன் 12-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்புத்துறையும் இணைந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூன் 12 -ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

News image

IANS

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்புத்துறையும் இணைந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூன் 12 -ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும்,மாவட்ட வேலைவாய்ப்புத்துறையும் இணைந்து நடத்தும் முகாமில் 1,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளனா். பட்டதாரிகள்,பட்டயதாரிகள், ஐடிஐ முடித்தவா்கள்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவா்களை தோ்வு செய்யவுள்ளனா்.18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் ஜூன்12 -ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.