இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தேவரியம்பாக்கத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

News image
Updated On :4 மார்ச் 2026, 11:55 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட தோனாங்குளம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்டது தேவரியம்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் அமைந்துள்ள தோனாங்குளம் கிராமத்தில் ரூ. 17.25 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றிருந்தது. இதன் திறப்பு விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் ம.த.அஜய்குமாா் தலைமை வகித்தாா். வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன், துணைத் தலைவா் பி.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் தானுராஜ் வரவேற்றாா்.

விழாவில் உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் கலந்து கொண்டு, புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு பூச்செண்டு கொடுத்து, இனிப்பு வழங்கினாா்.நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் எல்லப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பொற்கொடி செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஊராட்சி செயலாளா் சாந்தி நன்றி கூறினாா்.