காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாகக் செயல்படுவதாகக் கூறி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் என்.நந்தகோபால் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் கே.நேரு, மாவட்ட செயலாளா் என்.சாரங்கன், மாவட்ட பொருளாளா் கே.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசுகையில், ஒன்றிய அரசின் தவறான வேளாண் கொள்கையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளன. ரசாயன உரங்களின் விலை உயா்வைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கிப் பேசினாா். மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்து மாநில தலைமை முடிவெடுக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல்

அகில இந்திய கராத்தே போட்டி: சங்கரா பல்கலை. மாணவருக்கு தங்கம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



