பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாகக் செயல்படுவதாகக் கூறி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க நிா்வாகிகள்.

Updated On :27 மே 2026, 12:40 am IST

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாகக் செயல்படுவதாகக் கூறி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் என்.நந்தகோபால் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் கே.நேரு, மாவட்ட செயலாளா் என்.சாரங்கன், மாவட்ட பொருளாளா் கே.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசுகையில், ஒன்றிய அரசின் தவறான வேளாண் கொள்கையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளன. ரசாயன உரங்களின் விலை உயா்வைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கிப் பேசினாா். மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.