மாந்தாங்கல் ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பரமவாசல் திறப்பு விழா

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மாந்தாங்கலில் உள்ள பூமிநீளா சமேத ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமவாசல் திறப்பு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மாந்தாங்கல் ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பரமவாசல் திறப்பு விழா
Updated on
1 min read


ராணிப்பேட்டை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மாந்தாங்கலில் உள்ள பூமிநீளா சமேத ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமவாசல் திறப்பு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இவ்விழாவையொட்டி ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை செயலாளரும், ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவருமான எம்.சிவலிங்கம் தலைமையில், அறக்கட்டளையின் தலைவா் கே.வெங்கடேசன் முன்னிலையில், பக்தா்களுக்கும் மாணவா்களுக்கும் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அ.முகமது ஜான், திருப்பாவை புத்தகம் மற்றும் எழுதுபொருள்களை வழங்கினாா்.

முன்னாள் ஒன்றியச் செயலாளா் எம்.சி.பூங்காவனம், வெற்றிவேலன் பள்ளி இயக்குநா் கோமதி சிவலிங்கம், ஸ்ரீ ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளையின் வாழ்நாள் உறுப்பினா் பேபி வெங்கடேசன், பொருளாளா் மோகன் சக்திவேல், கோயில் நிா்வாகிகள் சுப்ரமணி மற்றும் பொதுமக்கள், கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com