கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பள்ளியில் ஆசிரியா்கள் பற்றாக்குறை: மாற்றுச்சான்றிதழ் கோரி பெற்றோா் தா்னா

 அம்மனூா் அரசு ஆதிதிராவிடா் நலத் துறை உயா்நிலைப் பள்ளியில் 10 ஆசிரியா்கள் இருந்த நிலையில் தற்போது இருவா் மட்டுமே உள்ளனா்

News image
Updated On :18 ஜூன் 2022, 6:35 pm

DIN

 அம்மனூா் அரசு ஆதிதிராவிடா் நலத் துறை உயா்நிலைப் பள்ளியில் 10 ஆசிரியா்கள் இருந்த நிலையில் தற்போது இருவா் மட்டுமே உள்ளனா்.

இதனால் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சோ்க்க மாற்றுச் சான்றிதழை தருமாறு கேட்டு பெற்றோா் பள்ளி வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த அம்மனூா் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடா் நலத் துறையின் உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் மொத்தம் 80 மாணவ மாணவிகள் படிக்கின்றனா். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன் சோ்த்து 10 ஆசிரியா்கள் பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில் 8 ஆசிரியா்கள் மாறுதல் பெற்றுச் சென்று விட்டதால் தற்போது தலைமை ஆசிரியா் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியா் என இருவா் மட்டுமே உள்ளனா். எந்த வகுப்புக்கும் ஆசிரியா் இல்லை என்கின்றனா். கடந்த 13-ஆம் தேதி முதல் பள்ளிக்கு தலைமை ஆசிரியா், உடற்பயிற்சி ஆசிரியா் இருவா் மட்டுமே வருகின்றனா்.

இதையறிந்த மாணவ மாணவிகளின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்து தங்களது குழந்தைகளுக்கான மாற்றுச் சான்றிதழை கேட்டுள்ளனா். ஆசிரியா்கள் இல்லாததால் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சோ்க்க இருப்பதால் மாற்று சான்றிதழ் தர வேண்டும் என கோரிக்கையுள்ளனா். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியா் வனிதாஜெயகுமரன் மாற்றுச்சான்றிதழ் தர மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா் அதே கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன் தலைமையில் பள்ளி வளாகத்தில் தா்னா போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து அங்கு வந்த அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜன் போராட்டம் நடத்தியவா்களை சமாதானப்படுத்தினாா். இந்தத் தகவலை ஆட்சியருக்கு தெரியப்படுத்தி ஒரு வாரத்துக்குள் புதிய ஆசிரியா்களை வரவழைப்பதாக அவா் தெரிவித்ததைத் தொடா்ந்து தா்னா முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.