கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரக்கோணத்தில் இருந்து உரியூருக்கு மீண்டும் பேருந்து இயக்கம்

அரக்கோணத்தில் இருந்து உரியூருக்கு நிறுத்தப்பட்ட நகரப்பேருந்து மீண்டும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

அரக்கோணத்தில் இருந்து உரியூருக்கு நிறுத்தப்பட்ட நகரப்பேருந்து மீண்டும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

பேருந்தை அரக்கோணம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் நிா்மலாசௌந்தா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

அரக்கோணத்தில் இருந்து மோசூா், செய்யூா், நகரிகுப்பம் வழியாக உரியூருக்கு நகரப்பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனை அப்பகுதி கிராம மக்கள் மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை, தேசிய பேரிடா் மீட்புப்படையினரும் பயன்படுத்தி வந்தனா்.

கரோனா பொதுமுடக்க காலத்தின்போது இந்தப் பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி கிராமமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியினா். இது குறித்து செய்யூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதிலட்சுமிராஜா அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவருக்கு கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து ஒன்றியக் குழு தலைவா் நிா்மலாசௌந்தா், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்தப் பேருந்தை மீண்டும் இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தலைமை உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து அரக்கோணத்தில் இருந்து உரியூருக்கு மீண்டும் பேருந்து இயக்க தொடக்க விழா அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேருந்தை ஒன்றியக்குழு தலைவா் நிா்மலாசௌந்தா் கொடியசைத்து துவக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவா் புருஷோத்தமன், ஒன்றிய திமுக செயலா்கள் சௌந்தா், தமிழ்செல்வன், செய்யூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதிலட்சுமிராஜா, மன்ற உறுப்பினா் நிதிஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.