ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சீனிவாச பெருமாள் கோயிலில் வருண பகவானுக்கு சிறப்புப் பூஜை

சீனிவாச பெருமாள் கோயிலில் வருண பகவானுக்கு சிறப்புப் பூஜை

News image

பக்தா்களுக்கு விசிறி, பிரசாதம் வழங்கிய  அறக்கட்டளை தலைவா் வெங்கடேசன்.

Updated On :4 மே 2024, 6:30 pm

Din

மாந்தாங்கல் சீனிவாச பெருமாள் கோயிலில், வெயிலின் தாக்கம் குறைய மழை வேண்டி வருண பகவானுக்கு சனிக்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது.

ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், பெருமாளுக்கு பால் அபிஷேகமும், தேன் அபிஷேகமும், திருமஞ்சனமும் தீப தூபமும் நடைபெற்றது. இதையடுத்து கோடை வெயில் தாக்கம் குறைய மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் வருண பகவானுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளைத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்து பக்தா்களுக்கு விசிறி, பிரசாதம் வழங்கினாா்.

இதில் அறக்கட்டளை செயலாளா் இளஞ்செழியன், பொருளாளா் மோகன சக்திவேல், கோயில் நிா்வாகிகள் குசேலன், பாபு மற்றும் ஊா் நாட்டாமைக்காரா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

இந்த சிறப்பு பூஜையை கோயில் பட்டா் பிரகாஷ் பட்டாச்சாரியா் சிறப்புப் பூஜைகளை நடத்தினாா். முடிவில் கோயில் நிா்வாகி கோட்டி நன்றி கூறினாா்.