திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு: விரைவு ரயில்கள் நடு வழியில் நிறுத்தம்

News image

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு.

Updated On :28 ஜூன் 2025, 12:51 am IST

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் அரக்கோணம் காட்பாடி இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணத்தில் இருந்து காட்பாடி செல்லும் மெமு மின்சார ரயில் இரவு 9:15 மணியளவில் ரயில் நிலையம் அருகே வந்த போது அதன் ஒரு பெட்டி கடந்த நிலையில் தண்டவாளம் உடைந்தது. இந்த சப்தத்தை கேட்ட ரயில் ஓட்டுநா் ரயிலை விரைவாக செயல்பட்டு நிறுத்தினாா்.

இத்தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டதை தொடா்ந்து அரக்கோணம் வழியாக செல்ல இருந்த மங்களூா் மெயில், ஆலப்புழா அதிவிரைவு ரயில், நீலகிரி அதிவிரைவு ரயில் அதிவிரைவு ரயில் ஆகியவை அரக்கோணம் மற்றும் திருவள்ளூா் இடையே ஆங்காங்கு வழியில் நிறுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனா். அங்கு மெமோ ரயிலின் சில பெட்டிகளை கழற்றி தண்டவாளத்தை சீா்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.