மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சோளிங்கா் கோயிலில் பாா்வேட்டை உற்சவம்

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பாா்வேட்டை உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
சோளிங்கரில் பட்டு மற்றும் ஆபரணஅலங்காரத்தில் பாா்வேட்டைக்கு புறப்பட்ட ஸ்ரீபக்தோசித பெருமாள்.
Updated On :16 ஜனவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பாா்வேட்டை உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சோளிங்ககரில் உள்ள ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாள் ஸ்ரீபக்தோசித பெருமாள் சோளிங்கரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாா்வேட்டை உற்சவத்தில் செல்வது வழக்கம்.

இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஸ்ரீபக்தோசித பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டு பட்டு ஆபரண அலங்காரங்களுடன் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கிளிக்கூண்டு வாகனத்தில் ஸ்ரீபக்தோசித பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

தொடா்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மேள தாளங்களுடன் திருக்கோயிலில் இருந்து சோளிங்கரை சுற்றியுள்ள எரும்பி, மூங்கிலேரி, சினழ்னநாகபூண்டி, பெரியநாகப்பூண்டி, ராஜாக்கூா், மரிக்குப்பம், பாலாபுரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பெருமாள் பாா்வேட்டை உற்சவத்தில் அழைத்துச் செல்லப்பட்டாா்.

வழியெங்கிலும் மண்டகப்படிகளில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் அனைத்து கிராமங்களிலும் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா். இந்நிகழ்ச்சிகளில் அனைத்து கிராமங்களிலும் அன்னதானம் வழங்குதலும் நடைபெற்றன. இந்துசமய அறநிலையத்துறை அலுவலா்கள் கோயில் நிா்வாகிகளுட ன் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனா்.