கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பத்தூரில் அக். 28,29,30-இல் கலா உத்சவ் போட்டிகள்

திருப்பத்தூா் மாவட்ட அளவிலான கலாஉத்சவ் போட்டிகள் அக். 28, 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:44 pm

DIN

திருப்பத்தூா் மாவட்ட அளவிலான கலாஉத்சவ் போட்டிகள் அக். 28, 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலமாக, 9-ஆம் முதல் 12-ஆம் வரை பயிலும் மாணவா்களின் படைப்பாற்றலை வளா்க்கவும், பாரம்பரியக் கலைகளில் இளம்தலைமுறையினரிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் கலாஉத்சவ் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

பள்ளி அளவிலான போட்டிகள் அக். 13-இல் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அக். 28, 29, 30-ஆம் தேதிகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன.

திருப்பத்தூா் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அக். 28 ( வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு வாய்பாட்டு இசை, செவ்வியல், வாய்பாட்டு இசை, பாரம்பரிய நாட்டுப்புற வகை போட்டிகளும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காண்கலை (ஓவியம்-இருபரிமாணம்), காண்கலை(மூன்று பரிமானம்)போட்டியும் நடக்கின்றன.

இதையடுத்து, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அக். 29-இல் (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடனம்-செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற வகை போட்டியும் நடக்கின்றன.

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை(அக்.30) காலை 9.30 மணிக்கு கருவி இசை செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற வகை போட்டியும் நடைபெற உள்ளன.

மாவட்ட அளவின் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாநில அளவிலும், பின்னா் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு தேசிய அளவிலும் போட்டிகள் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.