இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாணியம்பாடி கொலை வழக்கு: காஞ்சிபுரத்தில் இருவர் கைது

மனித நேய ஜனநாயக கட்சி மாநில இளைஞர் அணி செயலாளரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இருவரை காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு காவலர்கள் கைது செய்தனர்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 11:30 am

DIN

காஞ்சிபுரம்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி மாநில இளைஞர் அணி செயலாளரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இருவரை காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு காவலர்கள் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் வசீம் அக்ரம்.இவர் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞர் அணியின் துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். இவரை வெள்ளிக்கிழமை வாணியம்பாடியில் மர்மக்கும்பல் ஒன்று இவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு  தலைமறைவானது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க திருப்பத்தூர் மாவட்டங்களை சுற்றியுள்ள பிற மாவட்ட எல்லைகளில் காவலர்கள் சோதனைச்சவாடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம்  அருகே பொன்னியம்பட்டரை வாகன சோதனைச்சாவடியில் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனைச்சாவடியிலிருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு ஒரு கார் வேகமாக சென்றது. உடனடியாக காவலர்கள் அந்தக் காரை துரத்தி சென்று காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சுற்றி வளைத்தனர். காரையும், காரில் இருந்த பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

காரில் இருந்த இருவரிடமும் விசாரணை செய்ததில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா காலனி நேத்தாஜி தெருவைச் சேர்ந்த பிரசாத் என்ற ரவி(19)மற்றும் வண்டலூர் கே.கே.நகர் அருகே மண்ணிவாக்கம் மேட்டுத்தெரு டில்லிகுமார்(24) என்பதும் தெரிய வந்து இருவரையும் கைது செய்தனர். 

முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரால் ஆள் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும்,மேலும் சிலரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.