கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரயில்வே தரைப்பாலங்களில் தேங்கி நிற்கும் மழை நீா்: எம்.பி., எம்எல்ஏ ஆய்வு

ஜோலாா்பேட்டை அருகே உள்ள ரயில்வே தரைப்பாலங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ஜோலாா்பேட்டை அருகே உள்ள ரயில்வே தரைப்பாலங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து அப்பகுதியில் எம்.பி., எம்எல்ஏ, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த கட்டேரி ஊராட்சியில் இரண்டு ரயில்வே தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கட்டேரி ஊராட்சிக்குள்பட்ட லாரி ஷெட் பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலம், பக்ரிதக்கா பகுதியில் ரயில்வே தரைப் பாலத்தையும் சுற்றுப் பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த இரு ரயில்வே தரைப் பாலங்களைப் பயன்படுத்தி வருகின்றனா்.

மழைக்காலங்களில் இந்த இரு ரயில்வே தரைப்பாலங்களிலும் மழைநீா் குளம்போல் தேங்கி விடுவதால், மக்கள் 3 முதல் 6 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், திருவண்ணாமலை எம்.பி. சி.என். அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்) மற்றும் அதிகாரிகள்சனிக்கிழமை அந்த பாலங்களை ஆய்வு செய்தனா்.

பின்னா், இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை அதிகாரிகளிடமும், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் கூறி பணியை மேற்கொள்வதாக எம்.பி. சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.

பின்னா், ரயில்வே மண்டல முதுநிலை பொறியாளா் மயிலேரி, உதவி மண்டல பொறியாளா் விகாஸ் யாதவ் ஆகியோரிடம் இந்த பணி மேற்கொள்வதற்கான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்புமாறு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.