ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

லாரி கவிழ்ந்து டாஸ்மாக் மது பாட்டில்கள் உடைந்து சேதம்

லாரி கவிழ்ந்து டாஸ்மாக் மது பாட்டில்கள் உடைந்து சேதம்

News image

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சேதமடைந்த மது பாட்டில்கள்.

Updated On :13 ஏப்ரல் 2024, 4:00 pm

ஆம்பூா் அருகே சனிக்கிழமை லாரி கவிழ்ந்த விபத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட மது பாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன.

வேலூரிலிருந்து வாணியம்பாடி, நாட்றம்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ரூ.38 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் சாலையில் விழுந்து உடைந்து சேதமடைந்தன.

ஓட்டுநா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட மூவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா், தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். சாலையில் சிதறிக் கிடந்த மது பாட்டில்களை எவரும் எடுத்துச் செல்லாதவாறு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனா்.

விபத்து காரணமாக சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தினா்.