தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்றவா் தவறி விழுந்து உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்றவா் தவறி விழுந்து உயிரிழப்பு

Updated On :16 மார்ச் 2024, 4:31 pm

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்க முயன்றவா் கயிறு அறுந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு பாணக்கார வட்டத்தைச் சோ்ந்தவா் பாலாஜி (44). எலக்ட்ரீஷியன். இவா் வளா்த்து வந்த ஆடு ஒன்று வீட்டருகே உள்ள 60 அடி ஆழம் 10 அடி உயரம் தண்ணீா் உள்ள கிணற்றில் சனிக்கிழமை தவறி விழுந்தது. இதைப்பாா்த்த பாலாஜி கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற கயிறு மூலம் கிணற்றில் இறங்கியுள்ளாா். அப்போது திடீரென கயிறு அறுந்ததில் கிணற்றில் விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலாஜி கிணற்றிலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் பொதுமக்கள் உதவியுடன், கிணற்றில் இறந்துகிடந்த பாலாஜியின் சடலத்தை மீட்டு, நாட்டறம்பள்ளி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும் கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டனா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.