சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாதனூா் ஊராட்சி ஒன்றியம் சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ரூ. 30.60 லட்சத்திலும், அங்கன்வாடி மைய கட்டடம் ரூ.14.20 லட்சத்திலும் புதிதாக கட்டப்பட்டன. ஊராட்சி மன்றத் தலைவா் கலாவதி புருஷோத்தமன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலூா் தொகுதி எம்பி டி.எம். கதிா் ஆனந்த், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் ஆகியோா் புதிய கட்டடத்தை திறந்து வைத்தனா். மாதனூா் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், குடியாத்தம் ஒன்றிய செயலாளா் கல்லூா் ரவி, ஒன்றியக்குழு உறுப்பினா் தீபா ராசன்பாபு உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

பலாந்தாங்கலில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு

மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


