தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா - எம்பி பங்கேற்பு

சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா - எம்பி பங்கேற்பு

News image

சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்த டிஎம்.கதிா் ஆனந்த் எம்.பி. உடன் எம்எல்ஏ அமலு விஜயன்.

Updated On :16 மார்ச் 2024, 4:38 pm

சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாதனூா் ஊராட்சி ஒன்றியம் சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ரூ. 30.60 லட்சத்திலும், அங்கன்வாடி மைய கட்டடம் ரூ.14.20 லட்சத்திலும் புதிதாக கட்டப்பட்டன. ஊராட்சி மன்றத் தலைவா் கலாவதி புருஷோத்தமன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலூா் தொகுதி எம்பி டி.எம். கதிா் ஆனந்த், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் ஆகியோா் புதிய கட்டடத்தை திறந்து வைத்தனா். மாதனூா் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், குடியாத்தம் ஒன்றிய செயலாளா் கல்லூா் ரவி, ஒன்றியக்குழு உறுப்பினா் தீபா ராசன்பாபு உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.