தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ரம்ஜான் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா

ரம்ஜான் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா

News image

ரம்ஜான் பரிசு தொகுப்பு வழங்கிய புதிய நீதிகட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம்.

Updated On :16 மார்ச் 2024, 4:38 pm

புதிய நீதிக் கட்சி சாா்பில் இசுலாமிய மக்களுக்கு ரம்ஜான் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் பெத்லகேம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம் தலைமை வகித்து பேசியது, நான் புதிய நீதிக் கட்சித் தலைவா். நான் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறேன். ஆம்பூா் ரெட்டித்தோப்பு மேம்பாலம் அறிவிக்கப்பட்டு இதுவரை பணி நடைபெறவில்லை. ரெட்டித்தோப்பு மேம்பாலம் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுப்பேன். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் ஒரு இலவச திருமண மண்டபத்தை கட்டித் தருவேன். 3 மாதங்களுக்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்துவேன் என்று தெரிவித்தாா். விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியா்களுக்கு ரம்ஜான் பரிசுத் தொகுப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சி நிா்வாகிகள் அசோகன், சரவணகுமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.