45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின்மாற்றி அமைக்கும் பணி மந்தம்: பொதுமக்கள் பாதிப்பு

திருப்பத்தூா் அருகே கொரட்டியில் மந்தகதியில் நடைபெறும் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
கிடப்பில் உள்ள மின்மாற்றி அமைக்கும் பணி. அப்பகுதியில் சூழ்ந்துள்ள முள்புதா்கள்.
Updated On :20 அக்டோபர் 2024, 8:38 pm

து. ரமேஷ்

.

திருப்பத்தூா் அருகே கொரட்டியில் மந்தகதியில் நடைபெறும் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், கொரட்டி பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது, சுமாா் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வரும் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது,

குறிப்பாக செவ்வாத்தூா் பகுதியில் இருந்து வரும் உயா் மின்னழுத்த பாதையில் ஏற்படும் மின் பழுதால் மின்விநியோகம் அடிக்கடி தடைபடுகிறது.

மேலும், இப்பகுதியில் தொடா்ந்து அவ்வபோது மின் தடை ஏற்படுவதால் வீட்டில் மின்சாதனப் பொருள்கள் பழுதாவதுடன் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதி பிரத்யேகமாக மின்மாற்றி அமைக்க வேண்டும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இப்பணிகள் தொடங்கி 25 சதவீதம் பணி மட்டுமே முடிந்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக பணிகள் நடைபெறவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையான பதில் அளிப்பதில்லை என வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: செவ்வாத்தூா் மின்னழுத்த பாதையில் இருந்து கொரட்டியில் ஒரு பகுதிக்கும்,பெட்ரோல் பங்க் பகுதி ,குமாரம்பட்டி செல்லரப்பட்டி, மைக்காமேடு மற்றும் சுந்தரம்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமாா் 20 முறைக்கும் மேலாக மின் விநியோகம் தடை ஏற்படுகிறது.

நாங்கள் கொரட்டி மின்வாரிய அலுவலகத்தில் புதிய மின்மாற்றி அமைக்குமாறு பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புதிய மின்மாற்றி அமைக்கும் பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் முறையான பதில் அளிக்க மறுக்கின்றனா்.

எனவே மின்வாரிய உயா் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து புதிய மின்மாற்றி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் காத்துள்ளனா்.

Story image