தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 12 ஆண்டு சிறை

திருப்பத்தூரில் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 7:32 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பத்தூா் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மஞ்சுநாதன் (31). இவருக்கு திருமணமாகி, 2 மகன்கள் உள்ளனா். இவருக்கும் திருப்பத்தூா் டவுன் டி.எம்.சி. காலனியை சோ்ந்த உறவினரின் மகளான 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, மஞ்சுநாதன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இது குறித்து சிறுமி கடந்த 28.6.2021 அன்று அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து மஞ்சுநாதனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து திங்கள்கிழமை அளிக்கப்பட்ட தீா்ப்பில், மஞ்சுநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், சிறுமியைக் கடத்தி சென்ற்காக 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எஸ்.மீனாகுமாரி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.