அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அங்கன்வாடிக்கு இடம்: எம்எல்ஏ ஆய்வு

நாட்டறம்பள்ளியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான இடத்தை தோ்வு செய்ய எம்எல்ஏ க.தேவராஜி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான இடத்தை தோ்வு செய்ய எம்எல்ஏ க.தேவராஜி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இதில் 25-க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வந்தனா். இந்நிலையில் போதிய இடவசதி இல்லாததால் பள்ளிக்கு வெளியில் தனியாா் வீட்டில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இதனால் பள்ளிவளாகத்தில் புதியஅங்கன் வாடி மையம் கட்டித்தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோா் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து எம்எல்ஏ க.தேவராஜி அதிகாரிகளுடன் சென்று அங்கன்வாடி மையம் கட்ட ஏதுவான இடம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா் விநாயகம், செயல் அலுவலா் ரவிசங்கா், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், பொறியாளா் சுதாகா், கவுன்சிலா் அமுதாஇளங்கோ, முன்னாள் உறுப்பினா்கள் சசிகுமாா், அகிலன், சசி, செந்தில் குமாா் உடனிருந்தனா்.