பறவைகள் கணக்கெடுப்பு பணி: வனத் துறை அறிவிப்பு

பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
Published on

பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பறவைகள் கணக்கெடுப்பு பணிக்கான ஒருங்கிணைப்பாளரும், ஆம்பூா் வனச்சரக அலுவலருமான பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வனத் துறை மூலம் தமிழகமெங்கும் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு டிச. 27 மற்றும் 28 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது. திருப்பத்தூா் மாவட்டத்தில் 26 இடங்களில் நடைபெறும் பறவைகள் கணக்கெடுப்பில் ஏராளமான பறவை நிபுணா்கள், பறவை இனம் கண்டறிபவா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

மேலும், இந்த நிகழ்வில் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவா்கள் 97862 54998, 80568 67846 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com