அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மொபட்-காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

நாட்றம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமம் சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மொபட் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 4:38 pm

Din

வாணியம்பாடி: நாட்றம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமம் சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மொபட் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பையனப்பள்ளிகூட்ரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் உடையாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த குமாா்(55) என்பவா் மொபட்டில் சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கா்நாடக மாநில பதிவு எண் கொண்ட காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே குமாா் உயிரிழந்தாா்.விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டுநா் சாலை ஓரம் நிறுத்தி விட்டு தலைமறைவானாா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அப்போது கிராம மக்கள் பையனப்பள்ளி பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா், அப்போது போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். பின்னா் விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.