தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

வாணியம்பாடி அருகே காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 8:30 pm

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், ஆலங்காயம் காவல் ஆய்வாளா் ஜெயகீா்த்தி தலைமையிலான போலீஸாா் உள்ளிட்டோா் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமம் பலப்பல்நத்தம் பகுதியில் திங்கள்கிழமை மாலை வாகன சோதனை மேற்கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை சந்தேகத்தின்பேரில், நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். காருக்குள் இருந்த பொட்டலங்களை பாா்த்தபோது, கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. பிடிபட்ட இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பூங்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (29). திருப்பத்தூா் அருகே அகரம் கிராம பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக் செல்வகணபதி (23) எனவும் இருவரும் காரில் இருந்த 10 கிலோ கஞ்சாவையும், கடத்தி வந்த காரையும் பறிமுதல் செய்து ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிந்து காரில் கஞ்சா கடத்தி வந்த பாா்த்திபன், செல்வகணபதி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.