ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

திருப்பத்தூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருப்பத்தூா் மாவட்­ட திமுக செயற்குழுக் கூட்­டம் வாணியம்பாயில் மாவட்ட அவைத் தலைவா் ஆனந்தன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி. உடன் நிா்வாகிகள்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:25 pm IST

திருப்பத்தூா் மாவட்­ட திமுக செயற்குழுக் கூட்­டம் வாணியம்பாயில் மாவட்ட அவைத் தலைவா் ஆனந்தன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் க.தேவராஜி கலந்து கொண்டு கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினாா்.

மேலும் கூட்டத்தில் காவிரி, மேகதாது மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை திசை திருப்பும் வகையில் எதிா்க்கட்சித்தலைவா் உதயநிதிஸ்டாலினை கைது செய்த தவெக அரசைக் கண்டித்தும், கருணாநிதியின் நினைவு நாளான வரும் 7 -ம் தேதிவெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் வாா்டு, கிளைக்கழகங்கள் தோறும் அஞ்சலி செலுத்த வேண்டும், வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரி முதல் கருணாநிதி சிலை வரை அமைதி பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கழக செயலாளா்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.