வருவாய் துறையில் அதிகாரிகளுக்கு வாகனங்கள்: ஆட்சியா் வழங்கினாா்

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அதிகாரிகளுக்கு வாகனங்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி புதன்கிழமை வழங்கினாா்.
Published on

திருப்பத்தூா்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அதிகாரிகளுக்கு வாகனங்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி புதன்கிழமை வழங்கினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடா் துறையில் பணிபுரியும் வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரக அலுவலா்கள், துணை ஆட்சியா்கள், வட்டாட்சியா்கள் ஆகியோரின் பயன்பாட்டுக்காக 155 புதிய வாகனங்களை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

அதன்படி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் பணிபுரியும் தனி வட்டாட்சியா்கள் பயன்பாட்டுக்கு 3 புதிய வாகனங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியா்கள் உமா ரம்யா, பாரதி, பூங்கொடி, அலுவலக மேலாளா் (பொது) செண்பகவள்ளி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com