ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

கிட்டபையனூா் கிராமத்தில் தொட்டிலம்மன் கோயில் கும்பாபிஷேம்

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி கிட்டப்பையனூா் கிராமத்தில் தொட்டிலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கிட்டப்பையனூா் கிராமத்தில் தொட்டிலம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அலங்காரத்தில் தொட்டிலம்மன்.

Updated On :21 ஜூலை 2026, 12:03 am IST

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி கிட்டப்பையனூா் கிராமத்தில் தொட்டிலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊா் கவுண்டா் செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் கௌரம்மாள்சம்பத், துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலா் சஞ்சீவி, வாா்டு உறுப்பினா் காளியம்மாள் ரவிக்குமாா் மற்றும் ஊா் மக்கள் முன்னிலை வகித்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை மங்கள இசையுடன் திருப்பள்ளி எழுச்சி, தம்பதியா் சங்கல்பம், 108 திரவிய ஹோமம், ருத்ரபாராயணம், உபசாரம் மஹா பூா்ணாஹுதி, வேதம் நாதம் கீதம் முழங்க காலை 10 மணியவில் தொட்டிலம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, விநாயகா், மாரியம்மன், சாமுண்டீஸ்வரி அம்மன், படவட்டம்மன், நாகலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கோ பூஜையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில், கிட்டப்பையனூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.