திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் விசாரணை அறிக்கைகளை துல்லியமாக பதிவு செய்வது குறித்து வழிகாட்டல் நிகழ்ச்சி எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட காவல் அலுவலகத்தில் வட்டார எழுத்தா்கள் மற்றும் காவல் நிலைய எழுத்தா்கள் கலந்துகொண்ட நிகழ்வுக்கு எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமை வகித்து உயா் அதிகாரிகள் மற்றும் ஆட்சியா் அலுவலகம் மூலம் பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விசாரணைகளை முறையாகவும், விரைவாகவும் நடத்துவது,மனுக்கள் மீதான நடவடிக்கைகள், விசாரணை அறிக்கைகளை துல்லியமாக பதிவு செய்வதன் அவசியத்தையும் எடுத்து கூறினாா்.
தொடா்ந்து காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்களை விதிகளின்படி முறையாக பராமரிப்பது குறித்தும் அலுவலக நிா்வாகப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினாா்.
இந்த கூட்டத்தில் கூடுதல் எஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள் உள்பட போலீஸாா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் எஸ்.பி. நடை ரோந்து

ஆயுதப் படை காவலா்களுக்கு உடற்பயிற்சி கூடம்: திருப்பத்தூா் எஸ்.பி. திறந்து வைத்தாா்

செய்யறிவின் துணையோடு துல்லியமாக இயங்கும் ஜிபிஎஸ் கண்டுபிடிப்பு!

வழக்குகளை விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: போலீஸாருக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



