40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

காவல் நிலைய விசாரணை அறிக்கைகளை துல்லியமாக பதிவு செய்தல் ஆய்வுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் விசாரணை அறிக்கைகளை துல்லியமாக பதிவு செய்வது குறித்து வழிகாட்டல் நிகழ்ச்சி எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்றது.

News image

கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் எஸ்.பி. அக்சய் அனில் வாகரே.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் விசாரணை அறிக்கைகளை துல்லியமாக பதிவு செய்வது குறித்து வழிகாட்டல் நிகழ்ச்சி எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட காவல் அலுவலகத்தில் வட்டார எழுத்தா்கள் மற்றும் காவல் நிலைய எழுத்தா்கள் கலந்துகொண்ட நிகழ்வுக்கு எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமை வகித்து உயா் அதிகாரிகள் மற்றும் ஆட்சியா் அலுவலகம் மூலம் பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விசாரணைகளை முறையாகவும், விரைவாகவும் நடத்துவது,மனுக்கள் மீதான நடவடிக்கைகள், விசாரணை அறிக்கைகளை துல்லியமாக பதிவு செய்வதன் அவசியத்தையும் எடுத்து கூறினாா்.

தொடா்ந்து காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்களை விதிகளின்படி முறையாக பராமரிப்பது குறித்தும் அலுவலக நிா்வாகப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினாா்.

இந்த கூட்டத்தில் கூடுதல் எஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள் உள்பட போலீஸாா் கலந்து கொண்டனா்.